000 |
: |
nam a22 7a 4500 |
008 |
: |
170508b ii 000 0 tam d |
245 |
: |
_ _ |a நடுகல் தலைப்பலி வீரன் |
300 |
: |
_ _ |a நடுகல் |
340 |
: |
_ _ |a கருங்கல் |
500 |
: |
_ _ |a சீறூர் மன்னன், வேந்தன், தலைவன் அல்லது குடியின் வெற்றி வேண்டி தலையை அரிந்து பலியிடும் தலைப்பலி வீரன் |
510 |
: |
_ _ |a
- வை. கணபதி ஸ்தபதி, ‘சிற்பச் செந்நூல்’, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், 1978.
- T. A. Gopinatha Rao, ‘Elements of Hindu Iconography’, The Law Printing House, Mount Road, Madras, 1914.
- P.R. Srinivasan, ‘Bronzes Of South Indian’, Government Museum, Chennai, 1994.
- .ஆசனபதம்
- உக்கிரபீடம்
- உபபீடகம்
- தண்டிலம்
- பரமசாயிகம்
- மகாபீடபதம்
- மண்டூகம்
- மயமதம்
- மானசாரம்
- வாசுத்து சூத்திர உபநிடதம்
- ஸ்ரீதத்வநிதி
- அனுபோக பிரசன்ன ஆரூடம்
- அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி
- காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம்
- சர்வார்த்த சிற்ப சிந்தாமணி.
|
520 |
: |
_ _ |a தலைப்பலி எனப்படும் நவகண்டம் தன் தலைவன் அல்லது குடிகளின், மக்களின் நலன் வேண்டி வீரன் தன் தலையை அரிந்து கொற்றவை, துர்க்கை, காளி போன்ற தெய்வங்களுக்கு பலியிடலாகும். தலையறுத்துத் தரும் வழக்கம் தொல்பழங்காலத்திலிருந்தே வழக்கிலிருந்திருக்கிறது. தன் குலம் தழைக்க வேண்டும் என்பதற்காக தன்னையே பலியிடும் வழக்கம் அரசுருவாக்கத்திற்குப் பின் அரசனின் வெற்றிக்கானதாக மாறியிருக்கிறது. அக்காலத்துப் பூதத்திற்கு பலிகொடுப்பதாகவும், அரசனுக்கு உற்றதை ஒழிக்க வேண்டுமென முறையீட்டு தம்மைத் தாமே பலியிட்ட செய்தியை அறியமுடிகிறது. இவ்வாறு பலிகொடுத்ததற்காக நிலம் அழிக்கப்பட்டதையும், பல்லவர்கால நடுகல் குறிக்கிறது. இவை போர் நிமித்தமாக அரசனுக்காக நிகழ்த்தப்பட்ட உயிர்பலிகள் எனினும், போர்த் தெய்வமேனும் கொற்றவையே இப்பலிக்குரியவளாக பார்க்கப்பட்டிருக்கிறாள் என்பது தெளிவாகிறது. தன்னைத் தானே பலியிட்டு தன் குலத்திற்கு, தலைவனுக்கு வெற்றி வேண்டுவது சுவிப்பலி, ஆத்மபலி, நரபலி, களபலி தலைபலி, சிடிதலை (கன்னடம்) மிடிதலெ, கண்டதலெ (ஆந்திரம்) சாவாரப்பலி, தூங்குதலை கொடுத்தல், நவகண்டம் எனப் பல சொற்களால் அறியப்படுகிறது. களபலி என்பது போர்க்களத்தில் பூசல் தொடங்கும் முன் வெற்றி வேண்டி வெற்றி தெய்வமான கொற்றவைக்குக் கொடுக்கும் பலியாகும். இதனை கலிங்கத்துப்பரணி, தக்கயாக பரணி போன்ற போர் இலக்கியங்கள் எடுத்தியம்புகின்றன. இவ்வாறாக செயற்கரிய செய்யும் வீரர்களுக்கு நவகண்ட சிற்பங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்தில் வராகர் குகையில் அமைந்துள்ள மகிஷமர்த்தினியின் புடைப்புச் சிற்பத் தொகுதியில் தலைப்பலி கொடுக்கும் வீரனின் உருவம் இடம் பெற்றுள்ளது. முற்காலச் சோழர் கோயில்களில் வடபுறம் அமைந்துள்ள துர்க்கை அல்லது மகிஷாசுரமர்த்தினி கோட்டங்களின் இருபுறமும் இந்த தலைப்பலி வீரர்களின் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. பெண்ணேசுவர மடத்தில் மலையைச் சுற்றிலும் தலைப்பலி சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான இச்சிற்பத்தில் வீரன் ஒருவன் வலது கையில் உள்ள நீண்ட வாளால் தன் தலையை அரிகிறான். இடது கை நிலத்தில் ஊன்றியுள்ள நீண்ட மற்றொரு வாளைப் பிடித்துள்ளது. உடலை நேராக வைத்த நிலையிலும், கால்களை ஒன்றன் பின் ஒன்றாக பக்கவாட்டிலும் வைத்தபடி நிற்கும் வீரனின் காதுகளில் மகர குண்டலங்கள் துலங்குகின்றன. கழுத்தில் கண்டிகை, சவடி, கைகளில் தோள்வளை, முன் வளை ஆகியன விளங்குகின்றன. வீரர்களுக்கேயுரிய தொடை வரையிலான சுருள் மடிப்புகள் கொண்ட அரையாடையை இடைக்கட்டோடு அணிந்துள்ளான். மார்பில் புரிநூல் செல்வது நோக்கத்தக்கது. |
653 |
: |
_ _ |a தலைப்பலி, நடுகல், நடுகல் வீரன், கிருஷ்ணகிரி நடுகற்கள், பெண்ணேசுவர மடம், வீரக்கல், நினைவுக் கல், போர்வீரன், நவகண்டம் |
710 |
: |
_ _ |a முனைவர் கோ. சசிகலா |
752 |
: |
_ _ |a பெண்ணேசுவர மடம் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c பெண்ணேசுவர மடம் |d கிருஷ்ணகிரி |f பையூர் பற்று |
905 |
: |
_ _ |a கி.பி.12-13ஆம் நூற்றாண்டு/ |
914 |
: |
_ _ |a 12.39301965 |
915 |
: |
_ _ |a 78.24379742 |
995 |
: |
_ _ |a TVA_SCL_000295 |
barcode |
: |
TVA_SCL_000295 |
book category |
: |
கற்சிற்பங்கள் |
Primary File |
: |
TVA_SCL_000295_பெண்ணேசுவர-மடம்_நடுகல்-தலைப்பலி-வீரன்-001.jpg
|